Tamilnadu
25 அடி ஆழ கிணற்றில் விழுந்த முதியவர்.. 1 மணி நேரத்தில் மீட்ட தீயணைப்புத்துறைக்கு குவியும் பாராட்டு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். முதியவரான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே இருந்த உரை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் வருகிறதே என அப்பகுதி மக்கள் எட்டிப்பார்த்தபோதுதான் சந்திரசேகர் கிணற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது. பிறகு உடனே போலியிருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 25 அடி ஆழகிணற்றில் கயிறு கட்டி இறங்கினர். இதில் ஒரு வீரர் கிணற்றில் இறங்கி முதியவரைப் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார். கிணற்றில் விழுந்ததால் முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
பிறகு முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதையடுத்து கிணற்றில் விழுந்த முதியவரை ஒரு மணி நேரத்தில் உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு பொதுமக்களும், அவரது உறவினர்களும் நன்றி தெரிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!