Tamilnadu
"பா.ஜ.க அலுவலகமாக மாறிய ஆளுநர் மாளிகை".. CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் தாக்கு!
தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் பல்கலைக்கழகம் போன்ற நிகழ்ச்சிகளில் சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். இவரின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தான் ஒரு ஆளுநர் என்பதையே மறந்து ஒரு பா.ஜ.க கட்சித்தலைவர் போல் ஆளுநர் பேசியும், நடந்து வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க தலைமையில் தமிழக எம்.பிக்கள் கையெழுத்து பெற்ற மனு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்குரிய பொறுப்பிலிருந்து செயல்படாமல் பா.ஜ.க தலைவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படும் ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரி, தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைலையில்தான் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!