Tamilnadu
சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
மும்பை மாநிலம் மகாராஷ்டிரா கோலாபூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா ஆகிய முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் கோலாபூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகே உள்ள ஹலோந்தி பகுதியில் சிறியதாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
புதிதாக தொடங்கப்பட்ட உணவகத்தில் சூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் உணவகத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களை கவனித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் நேற்று முன் தினம் இரவு உணவகத்தில் வேலைகளை முடித்துவிட்டு, சங்கிலி - கோலாபூர் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே கல்யாணி உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த மும்பை போலிஸார் உடலை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடிகை உயிரிழந்த சம்பவம் சக நடிகர், நடிகையர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!