Tamilnadu
புனே செல்லவிருந்த பெண் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பான சென்னை விமான நிலையம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா. இவர் மங்களூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில்,நேற்று இரவு சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தார். அதன் பின்பு அவா், இன்று அதிகாலை சென்னையிலிருந்து புனே செல்லும் மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் செல்லவிருந்தார். இதனால் அவர் வெளியே எங்கும் செல்லாமல் விமான நிலையத்திலேயே அமர்ந்திருந்தார்.
பின்னர், புனே செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கான போா்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு பு பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காகத் தயாரானார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, விமான நிலைய ஊழியர்களுக்கு தெரிவித்தனர். உடனே ஊழியர்கள் விரைந்து வந்து, அவரை சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!