Tamilnadu
"'வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர்' அண்ணன் எ.வ.வேலு.." - அமைச்சருக்கு புகழாரம் சூட்டிய உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை தெற்கு - வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "நகர்ப்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு - கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் - அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், தி.மு.க மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இதில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "இந்த விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகப்பெரிய பெருமை. இதற்காக அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு என் வாழ்நாள் எல்லாம் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த மாவட்டத்திற்கு பலமுறை வந்துள்ளேன். ஆனால் இந்தமுறை வந்துள்ளதை மறக்கமுடியாத ஒன்றாக கருதுகிறேன். காரணம், நாம் வென்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஒரு சட்டமன்ற உறுப்பினராக வந்துள்ளேன்.
கலைஞர் சொன்னதை, தலைவர் முதலமைச்சர் அவர்கள் சொன்னதை நானும் சொல்கிறேன். "எதிலும் வல்லவர்" அண்ணன் எ.வ. வேலு அவர்கள். இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால் "வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர்" எ.வ.வேலு அவர்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல; பல மாங்காய்களை அடிப்பவர் அண்ணன் வேலு. அதனை என்னுடைய நேரடி அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். மற்ற மாவட்டங்களுக்கு சென்று கழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக வழிநடத்தும் இவர், தன்னுடைய மாவட்டத்தில் சும்மா இருப்பாரா? கழகத்தின் கோட்டையாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் என்றும் அவர் நம்முடைய தலைவரின் போர்வாளாக இருப்பார்.
Also Read
-
“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!
-
”திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர திமுக ஆட்சி வேண்டும்” : சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
-
”ஓய்வின்றி உழைப்போம்.. திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்போம்” : 75,000 BLA2-க்களுடன் முதலமைச்சர் பேச்சு!
-
எதிர்க்கட்சியினரை முடக்க சதி : செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை - முதலமைச்சர் கண்டனம்!
-
“ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்” : நடிகர் சத்யராஜ் கடும் தாக்கு!