Tamilnadu
விளையாடும்போது நடந்த விபரீதம்.. அண்ணன் கண்முன்னே தம்பிக்கு நேர்ந்த துயரம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உத்தண்டராமன். இவரது மனைவி உத்ரா. இந்த தம்பதிக்கு அகிலன், உத்தண்டு என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் வீட்டிற்குமுன்பே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் அகிலன் தவிறி கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து சகோதரன் உத்தண்டு பதறியடித்து கதறியுள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் அகிலனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!