Tamilnadu
நகையை பாலிஷ் போடக் கொடுத்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கைவரிசை காட்ட முயன்ற வடமாநில கும்பல்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராணி சந்திரிகா. இந்த தம்பதியின் மகள் சந்திரகாந்தா.இவர்களது வீட்டிற்கு நேற்று வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் வந்துள்ளனர்.
இவர்கள் தங்க நகைகளை பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறியுள்ளனர். முதலில் ராணி சந்திரிகா மறுத்துள்ளார். ஆனால் அவரது மகள் சந்திரகாந்தா தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழட்டி பாலிஷ் போட கொடுத்துள்ளார்.
பிறகு அவர்கள் மோதிரத்தை பாலிஷ் போட்டி கொடுத்துள்ளனர். இதையடுத்து கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த செயினை கழற்றி கொடுத்துள்ளனர். அப்போது நகையை பாலிஷ் போட்டபோது சற்று நேரத்திலேயே நகைகள் கரைந்ததைக் கண்டு தாயும், மகளும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
உடனே அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், பீகாரை சேர்ந்த ரகுநாதன் ராகு என்றும் அவருடன் இருந்த சிறுவன் அவரது அண்ணன் மகன் என்பதும் விசாரணையில் தெரிந்தது. மேலும் நகையை ஆசிட்டில் கரைத்ததும் தெரிந்ததால் அவர்கள் நகையை நூதன முறையில் கொள்ளையடிக்க வந்துள்ளார்களா என்பது குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!