Tamilnadu
“காந்தி தேசத்துரோகி.. சாவர்க்கர் தேசப்பிதா” : இந்து முன்னணி நிர்வாகியின் திமிர் பேச்சால் சர்ச்சை !
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததில் காந்திக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அதுவரை உயர்சமூகத்தை சேர்ந்தவர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் அதன்பின்னரே வெகுஜன மக்கள் பங்கேற்கும் இயக்கமாக மாறியது.
அதன்பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தின் முகமாக காந்தி மாறினார். இந்திய பொதுமக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் காந்தியின் பங்கு அளப்பரியது. ஒரு இந்துவாக இருந்தாலும் அனைத்து மதத்தையும் அரவணைத்து சென்றார். மதசகிப்பே இந்திய நாட்டுக்கு அவசியமானது என்ற கருத்தை பலமுறை பொதுஅரங்கில் கூறி மத ஒற்றுமையை மக்களிடையே விதைத்து வந்தார்.
காந்தியின் இந்த செயல் வலதுசாரி இந்துத்துவவாதிகளிடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தியது. இந்திய மத ஒற்றுமைக்கு ஆதாரமாக காந்தி இருப்பதால் அவரை கொலை செய்யவேண்டும் என பலர் பகிரங்கமாகவே பேசத்தொடங்கினர்.
அதன்விளைவாக தீவிர இந்துத்துவவாதியும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கருடன் நெருங்கிய தொடர்புகொண்டவருமான கோட்ஸேவால் காந்தி சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். சுதந்திரத்துக்கு பின்னரும் இந்துத்துவவாதிகள் காந்தியை தொடர்ந்து விமர்சித்தே வந்தனர். பல மேடைகளில் காந்தியை அவதூறு பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது இந்து முன்னணியை சேர்ந்த அசோக் என்பவர் காந்தியை தேசவிரோதி என பொதுமேடையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேறொரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் மேடை ஏறி பேசத்தொடங்கிய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஒருவர் காந்தியை தேச துரோகி என விமர்சித்ததோடு சாவர்க்கரை தேசப்பிதா என்று கூறினார். இதற்கு அங்கு இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!