Tamilnadu
நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.. உறவினர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயர சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலையை ஒட்டி உள்ள ஊர்கவண்டனூர் ஊராட்சி வனப்பகுதி அருகே உ குண்டூர் நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஹாரிப் என்ற வாலிபர் தனது உறவினர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது ஹாரிப் அறுவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் நீர்வீழ்ச்சிக்குள் மூழ்கினார்.
பின்னர், நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த ஹாரிப் காணாததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு இது பற்றி போலிஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின் விரைந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீர்வீழ்ச்சியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிறகு சில மணி நேரம் தேடுதலை அடுத்து ஹாரிப் உடல்மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்வீழ்ச்சியில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!