Tamilnadu
பெற்றோர்களே உஷார்.. கொதிக்கும் சாம்பாரில் விழுந்து ஒரு வயது குழந்தை பரிதாப பலி!
தருமபுரி மாவட்டம், சாமனூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி சுகுணா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுகுணா அடுப்பிலிருந்து கொதிக்கும் சாம்பாரை எடுத்து கீழே வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தேன்மொழி என்ற அவரின் ஒரு வயது குந்தை நிலை தடுமாறிக் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சுகுணா உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதையடுத்து குழந்தைக்கு் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!
-
ஒரு நாள் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் : பாஜகவை விமர்சித்து அவர் கூறியது என்ன ?
-
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
"அவ்வளவுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது" - இர்பான் பதான் கருத்து !
-
"விரைவில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" - SRH பயிற்சியாளர் நம்பிக்கை !