Tamilnadu
குடிபோதையில் டீ கடையை சூறையாடிய நடிகையின் சகோதரர்.. அதிரடியாக தட்டி தூக்கிய போலிஸார் !
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை. இவர் அதேபகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம்போல தனது கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த விக்கி (எ) விக்னேஷ் குமார் என்பவர் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் குமார் சேர்மதுரையில் டீ கடையை தாக்கி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளார். மேலும், கடாயில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சேர்மதுரை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கொலை வழக்கு பதிவுசெய்த போலிஸார் விக்னேஷ் குமாரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த விக்னேஷ் குமார் போலீஸாரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் அவரிடம் இருந்து 100 ரூபாய் பணம், 1 வீச்சு அரிவாள் மற்றும் ஜீப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையில் அவர் நடிகை பாபிலோனாவின் சகோதரர் என்பதும் அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் விக்னேஷ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!