Tamilnadu
உள்ளாடையை MRP விட ரூ.2 கூடுதலாக விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் : 2.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த கேசவன் மகன் சிவபிரகாஸம். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை மைலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் ரூ.278 கொடுத்து உள்ளாடை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய உள்ளாடையின் பெட்டியில் அதிகப்பட்ச விலை ரூ.260 என குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து கேட்டபோது, கடையின் ஊழியர் முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து சிவபிரகாஸம் தொடுத்த வழக்கின் விசாரணை சென்னை தெற்கு நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தில் நியாயமற்ற வர்த்தகம் நடைபெற்றுள்ளது. நிறுவனத்தில் சேவை குறைபாடும் உள்ளது.
எனவே, தமிழ்நாடு மாநில நல நிதிக்கு ரூ.2 லட்சமும், பாதிக்கப்பட்ட சிவபிரகாஸத்திற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!