Tamilnadu
லிப்டில் சிக்கிக்கொண்ட 7 பேர்.. தகவல் அறிந்து விரைந்து மீட்ட போலிஸார்.. பாண்டி பஜாரில் பரபரப்பு !
சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் ஜி.என் செட்டி சாலையில் மல்லு ஜாயிண்ட் என்ற ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இந்த உணவகத்துக்கு நேற்று வடமாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் அந்த உணவகத்தில் உணவு அருந்துவதற்காக வந்துள்ளனர்.
அப்பொழுது மாடிக்கு சென்று உணவு அருந்துவதற்காக அருகில் இருந்த லிஸ்டில் மாடிக்கு செல்ல பயணித்த போது லிப்ட் பாதியிலேயே சிக்கிக்கொண்டது. பின்னர் உணவகத்தின் நிர்வாகத்தின் சார்பில் லிப்டில் சிக்கிக்கொண்ட ஏழு பேரையும் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துரிதமாக செயல்பட்டு லிப்டை சரி செய்து உள்ளே சிக்கிக் கொண்டிருந்த 3 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை என ஏழு நபர்களையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாக நிலையில் பலரும் காவல்துறையின் துரிதமான செயல்பாட்டிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!