Tamilnadu
வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
திருவாரூர் மாவட்டம், திருவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். 5 மாத கர்ப்பிணியான இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைத் தனது இல்லத்திலேயே கணவர் விக்னேஷ் நடத்தியுள்ளார்.
இந்த வளைகாப்பு நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தக்காளி, தயிர், புளி, கருவேப்பிலை, லெமன் சாதத்துடன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது.
இந்த உணவைச் சாப்பிட்ட மாரியம்மாள் உட்பட 8 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த வேலங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளைகாப்பு நிகழ்வில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!