Tamilnadu
"புத்தி பேதலித்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கின்றார் பழனிசாமி".. அமைச்சர் துரைமுருகன் காட்டம்!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னைக் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூபாய் ரூ. 35 கோடியில் புதிய மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் தலையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "உச்ச நீதிமன்றத்தில் அணை கட்டக்கூடாது என்று வழக்கு நடைபெற்ற வருகிறது அதனைத் தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது. இதனை அறியாத எடப்பாடி பழனிச்சாமி புத்தி பேதலித்து ஏதேதோ பேசி வருகிறார் .
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் அணைகளைப் பராமரிப்பு செய்யாத காரணத்தினால் கிருஷ்ணகிரி பரணி குளம் ஆகிய ஆணைகள் எத்தனை மணிக்குத் தண்ணீர் வெளியேறுகிறது? இப்பொழுது அனைத்து அணைகளையும் பழுது பார்க்க உத்தரவிட்டு உள்ளோம். விரைவில் சரி செய்யப்படும்.
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு தி.மு.க-வின் கொள்கை பற்றித் தெரியாது. எந்த காலத்திலும் தீவிரவாதத்திற்கு தி.மு.க ஒரு போதும் துணை போகாது "என தெரிவித்தார்.
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!