Tamilnadu
"புத்தி பேதலித்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கின்றார் பழனிசாமி".. அமைச்சர் துரைமுருகன் காட்டம்!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னைக் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூபாய் ரூ. 35 கோடியில் புதிய மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் தலையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "உச்ச நீதிமன்றத்தில் அணை கட்டக்கூடாது என்று வழக்கு நடைபெற்ற வருகிறது அதனைத் தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது. இதனை அறியாத எடப்பாடி பழனிச்சாமி புத்தி பேதலித்து ஏதேதோ பேசி வருகிறார் .
கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் அணைகளைப் பராமரிப்பு செய்யாத காரணத்தினால் கிருஷ்ணகிரி பரணி குளம் ஆகிய ஆணைகள் எத்தனை மணிக்குத் தண்ணீர் வெளியேறுகிறது? இப்பொழுது அனைத்து அணைகளையும் பழுது பார்க்க உத்தரவிட்டு உள்ளோம். விரைவில் சரி செய்யப்படும்.
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு தி.மு.க-வின் கொள்கை பற்றித் தெரியாது. எந்த காலத்திலும் தீவிரவாதத்திற்கு தி.மு.க ஒரு போதும் துணை போகாது "என தெரிவித்தார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!