Tamilnadu
16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - மகிளா நீதிமன்றம் அதிரடி!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வார்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (36). இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 2021 ஜுன் மாதம் அதேபகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து சிறுமியின் பெற்றோர் பொன்னமராவதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணேசனை போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா கணேசன் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 6 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளி கணேசன் காவல்துறையினரின் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!