Tamilnadu
"செல்போன் திருடிய திருடர் கவனத்திற்கு.." - COOL DRINKS கடையில் திருடியவருக்கு அறிவுரை வழங்கிய நபர் !
இராமநாதபுரம் அருகே உள்ள தெற்கு வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலை கதிரவன். இவர் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே `லஸ்ஸி ஸ்பாட் (Lassi Spot)' என்ற பெயரில் ஒரு குளிர்பான கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி பகல் அவரது கடைக்கு ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து பார்ப்பதற்கு நல்லவர் போல் இருக்கும் நபர் ஒருவர் ஜூஸ் குடிப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு தேவையான ஜூஸை ஆர்டர் செய்து குடித்தார். பின்னர் அவர் அந்த கடை கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த கடை உரிமையாளரிடம் குடித்த ஜூஸுக்கான பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் செல்லுமுன் கல்லாப்பெட்டி டேபிளில் இருந்த ஓனரின் செல்போனை நேக்காக எடுத்து தனது சட்டைப்பையில் வைத்து கொண்டு நகர்ந்திருக்கிறார். பின்னர் அவர் சென்றபிறகு டேபிளில் இருந்த செல்போனை காணவில்லை என்று தேடி பார்த்தபோது அது கிடைக்கவில்லை.
எனவே கடையில் மாட்டியிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது ஜூஸ் குடித்து காசு கொடுக்க வந்த நபர் திருடியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அங்கிருந்தவர்கள் வற்புறுத்தியபோதும், அவர் தான் அதனை செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் செல்போன் திருடிய நபருக்கு தனது முகநூல் பக்கத்தில் அவரது புகைப்படத்திற் வெளியிட்டு அவருக்கு அறிவுரை வழங்குபடியான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "செல்போன் திருடிய திருடர் கவனத்திற்கு, நீங்கள் திருடிய செல்போனின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ரூ.2,500 மட்டுமே.
ஆதலால் தயவு செய்து விற்க முயற்சிக்க வேண்டாம். வேண்டுமென்றால் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி " என்று குறிப்பிட்டிருந்தார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Also Read
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!
-
நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பா.ஜ.க தான் : மோடியின் பேச்சுக்கு அகிலேஷ் விமர்சனம்!
-
பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? : பொதுமக்கள் அச்சம் - பிரதமர் மோடிக்கு ரவிக்குமார் எம்.பி கேள்வி!