Tamilnadu
’மதுரைக்காரங்கன்னா சும்மாவா..’ : கணவனை விளையாட அனுப்ப பத்திரம் எழுதி கொடுத்த மணப்பெண்!
திருமண நிகழ்வில் மணமக்களின் நண்பர்கள் செய்யும் பலவிதமான சேட்டை சம்பவங்களைப் நாம் பார்த்துள்ளோம். ஏன் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கூட மணமக்களிடம் அவரது நண்பர்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொடுப்பதை பார்த்திருப்போம்.
ஆனால் மதுரைக்காரங்கன்னா சும்மாவா என்பது போல இந்த வீடியோக்களை எல்லாம் தட்டி தூக்கும் விதமாக இது அதற்கும் மேல என்பது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே ஹரிப்பிரசாத், பூஜா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. இதில் ஹரிப்பிரசாதின் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, அவர்கள் மணப்பெண் பூஜாவிடம், திருமணத்திற்கு பிறகும் தங்களது நண்பரை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
அந்த பத்திரத்தில், "பூஜா எனும் நான் சூப்பர் ஸ்டார் அணியின் கேப்டனும் எனது கணவருமான ஹரிப்பிரசாத் அவர்களை இன்று முதல் வரும் அனைத்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சூப்பர் ஸ்டார் அணிக்கு கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறேன்" என எழுதப்பட்டிருந்த பத்திரத்தில் பூஜா கையெழுத்துப் போட்டுள்ளார்.
தற்போது இந்த பத்திரம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் பல விதமாக தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!