Tamilnadu
‘ஏன்டா Half boilல பெப்பர் அதிகமா போட்ட’ : வேகாத முட்டைக்காக ஹோட்டலை அடித்து நொறுக்கிய அதிமுக பிரமுகர் !
சேலம் மாவட்டம் கெங்கவல்லி - தம்மம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் குமரேசன் ( 36 ) என்பவர் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் நான்கு பேரும் கடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஆஃப்பாயில் ஆர்டர் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் ஆர்டர் செய்த ஆஃப்பாயில் அவர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.
அதைச் சாப்பிட்ட அவர்கள் பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் குமரேசன் கேட்டபோது அவரையும் கடையில் இருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர் . பின்னர் கடையிலிருந்த மாவு, முட்டைகளைக் கீழே தள்ளிச் சூறையாடியுள்ளனர் .
இச்சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் குமரேசன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார் உணவகத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் ஓட்டலை சூறையாடிய அதிமுக, பிரமுகர்களான பிரவீன் , பிரபு , கௌதம் , நடராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!