Tamilnadu
திருமணமான 2வது நாளே சாலை விபத்தில் புதுமணப்பெண் பலி.. கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்!
திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் , சுப்பிரமணி ஆகிய இருவரும் வேலூரிலிருந்து திருச்செங்கோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். புளியம்பட்டி சுரக்காய் தோட்டம் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது இரு சக்கர வாகனம் மோதியுள்ளது.
இதில் சுரேஷ் , சுப்பிரமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதேபோல் காரில் வந்த ராமகிருஷ்ணன் அரவது மனைவி ஜீவிதா ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து பற்றி அறிந்து அங்க வந்த போலிஸார் படுகாயம் அடைந்தவர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராமகிருஷ்ணன், ஜீவிதா ஆகிய இருவருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!
-
”குஜராத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கும் வாக்குத் திருட்டு” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
பசிப்பிணி மருத்துவராக காலை உணவின் கதிரவனாக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் : முரசொலி!
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !