Tamilnadu
முதல்வரை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மாற்றுத்திறனாளி பெண்:அருகில் சென்று ஆதரவாக பேசிய நெகிழ்ச்சி சம்பவம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமான மூலம் கோவை சென்ற முதல்வருக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.08.2022) கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது மாற்றுத்திறனாளி ஒருவர் முதலமைச்சரை தொட்டு கதறி அழுதார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடீயோவை பார்த்த பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து வருகின்றனர்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!