Tamilnadu
புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு விரைவில் சிலை.. முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!
முத்தமிழறிஞர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.கவினர் அமைதி பேரணி சென்று, கலைஞர் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாநில கழக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் முதல்வர் ரங்கசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது, அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு, எனவே புதுச்சேரி அரசு சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது மாநில கழக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், நித்திஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Also Read
-
பொத்தென்று மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்... கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி! - video
-
“பழனிசாமியின் முகவர்... அதிமுகவின் B டீம்...” - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!
-
தமிழ்நாடு அரசின் Iconic Projects... அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு... விவரம்!
-
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!