Tamilnadu
புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு விரைவில் சிலை.. முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!
முத்தமிழறிஞர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.கவினர் அமைதி பேரணி சென்று, கலைஞர் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாநில கழக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் முதல்வர் ரங்கசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது, அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு, எனவே புதுச்சேரி அரசு சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது மாநில கழக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், நித்திஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Also Read
-
வரலாற்று சாதனை படைத்த சுபான்ஷு சுக்லா... பத்திரமாக திரும்பிய விண்வெளி வீரர்கள் - விவரம் என்ன ?
-
இரட்டைப் பானை முறை முதல் இராணுவத்தில் பாகுபாடு வரை.. எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு அரங்கம் திறப்பு!
-
மாணவர்களுக்காக... அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு !
-
“எந்த டெல்லி அணியுடைய காவி திட்டமும் தமிழ்நாட்டில் பலிக்காது!” : சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்! : முதலமைச்சர் மேற்பார்வையில் ‘ஒரு மணி நேரத்திற்குள் பயன்’ பெற்ற மக்கள்!