Tamilnadu
புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு விரைவில் சிலை.. முதலமைச்சர் ரங்கசாமி உறுதி!
முத்தமிழறிஞர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.கவினர் அமைதி பேரணி சென்று, கலைஞர் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாநில கழக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் முதல்வர் ரங்கசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, புதுச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது, அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு, எனவே புதுச்சேரி அரசு சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது மாநில கழக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், நித்திஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Also Read
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!