Tamilnadu
சாலை விபத்தில் உயிரிழந்த தம்பி.. சகோதரன் இழப்பை தாங்காமல் விபரீத முடிவெடுத்த அக்கா!
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள்மதுமிதா, மகன் கண்ணன். இதில் மகன் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்துவந்தார்.
அதேபோல், மகள் மதுமிதா திருமணமாகி தனது கணவர் மோகராஜ் என்பவருடன் வசிக்கின்றார். இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன் கண்ணன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் தம்பி இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மதுமிதா மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு தனது வீட்டில் மதுமிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தம்பி உயிரிழந்ததால் அக்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!