Tamilnadu
சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி கோர விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாப பலி - 13 பேர் படுகாயம்!
ராமநாதபுரம் மாவட்டம் கழுவன்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் இருக்கன்குடி சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று டாடா ஏஸ் சரக்குவாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது.
இதில் டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த ஓடையில் சென்று விழுந்தது. கார் தலைகீழாக கவிழ்ந்து சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில், டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 13 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!