Tamilnadu
சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி கோர விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாப பலி - 13 பேர் படுகாயம்!
ராமநாதபுரம் மாவட்டம் கழுவன்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் இருக்கன்குடி சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று டாடா ஏஸ் சரக்குவாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது.
இதில் டாட்டா ஏஸ் சரக்கு வாகனம் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த ஓடையில் சென்று விழுந்தது. கார் தலைகீழாக கவிழ்ந்து சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில், டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 13 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!