Tamilnadu
இளம் பெண் குத்தி கொலை.. வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: விசாரணையில் பகீர்!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் வினோத்குமார் எதிர்வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்குத் திருமணமாகி சீனிவாசன் என்ற கணவர் உள்ளார்.
இதையடுத்து வினோத்குமார், புவனேஸ்வரி பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வினோத்குமார் திடீரென புவனேஸ்வரி வீட்டிற்குச் சென்று அவரை சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் வினோத்குமார் அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“முதலமைச்சர் விஜய்யின் மவுனத்தால், காவல்துறை மரணங்கள் தொடர்ந்து வருகிறது!” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
போராட்ட எழுச்சி ஒருபுறம்; ஜனநாயகனின் கொண்டாட்டம் மறுபுறம்! : தடம் மாறுகிறதா தமிழ்நாடு?
-
“நீட் தடையை உடைப்பதற்கான படையாக DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்” : உதயநிதி ஸ்டாலின்!
-
”NEET தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது.” : தி இந்து நாளிதழில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
“கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்” : ச.தமிழ்ச்செல்வனுக்கு முரசொலி பதிலடி!