Tamilnadu
தூங்கி கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர்.. ஜன்னல் வழியே ஓட்டை போட்டு 40 பவுனை ஆட்டைய போட்ட கும்பல் !
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பர்மா காலனியை சேர்ந்தவர் ஆனந்த குமார். 61 வயதாகும் இவர், முன்னாள் BSNL ஊழியர் ஆவார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவரது
சம்பவத்தன்று இவரும், இவரது மகனும் வீட்டினுள் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பக்கத்துக்கு அறையில் எதோ சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அந்த முதியவரோ, தனது மனைவி தான் அந்த அறையில் இருப்பதாக எண்ணி மீண்டும் உறங்கியுள்ளார்.
இந்த நிலையில் மறுநாள் காலை அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பதற்றமடைந்த முதியவர், அவரது மகனிடமும், வீட்டின் எதிரில் வசிக்கும் மகளிடமும் கூறியுள்ளார். ஆனால் மகளோ அம்மா தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதனால் குழப்பமடைந்த ஆனந்த குமார், தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக சென்று பார்க்கையில், அந்த அறையிலுள்ள ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் நபர்கள், ஜன்னல் வழியே உள்ளே சென்று பார்க்கையில், கதவு உள்பக்கம் தாழிட்டு இருப்பதாய் கண்டனர். மேலும் அந்த அறையில் இருந்த பீரோவில் உள்ள 40 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஐம்பதாயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து முதியவர் ஆனந்தகுமார், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரைக்குடி வடக்கு காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீட்டில் ஆள் இருக்கும்போதே கொள்ளையர்கள் ஜன்னலை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!