Tamilnadu
காணாமல் போன குழந்தையை தேடி பரிதவித்த தாய்.. கழிவறை கதவை திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வாதலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மாரிப்பாண்டியன். இவரது மனைவி மாரித்தாய். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது.
இந்நிலையில் நேற்று வீட்டில் மாரித்தாய் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமால் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார்.
ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. மேலும் குழந்தையை யாரும் தூக்கிச் செல்லவில்லை என பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூறியுள்ளனர். இதனால் வீட்டிலேயே மாரித்தாய் மீண்டும் தேடிப் பார்த்துள்ளார்.
அப்போது, வீட்டின் குளியல் அறையிலிருந்த வாளியில் குழந்தை தலைக்குப்புற கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு வந்துபார்த்த அருகே இருந்தவர்கள் உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளியல் அறை வாளியில் தவறி விழுந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு : கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம்!
-
தவெக அரசு அறிவித்த குறுவை சிறப்புத்தொகுப்பு விவசாயிகளை சென்றடையவில்லை! : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
அந்த 3 கோப்புகளையும் திறந்து பாருங்கள் : பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் Open Challenge!
-
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் : சோகத்தில் திரையுலகம்!
-
த.வெ.க அரசை எதிர்க்கும் சி.பி.எம் : நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - காரணம் என்ன?