Tamilnadu
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. ஓட்டுநர் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸார்!
புல்லூர் எஸ்டேட் அருகே 100 அடி பள்ளத்தாக்கில் அடையாளம் தெரியாத கார் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடன் 108 ஆம்புலன்ஸயும் அழைத்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், அந்த காரை மீட்கையில் காரில் பயணித்த நபர் ஒருவர் லேசான காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் இருந்தார். இதையடுத்து நூலிழையில் உயிர்பிழைத்த அந்த நபரை காவல்துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் தஞ்சாவூரை சேர்ந்த அன்பரசன் என்றும், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் தான் குடும்ப பிரச்னை காரணமாக 100 அடி பள்ளத்தாக்கில் இருந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
இவரளித்த வாக்குமூலத்தின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!