Tamilnadu
வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலி.. தாயிடம் போலிஸ் விசாரணை - பகீர் பின்னணி?
திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் அருகே உள்ள அவிநாசி நகர் பகுதியில், பீகாரை சேர்ந்த புதன்மார்கோ (29). இவரது மனைவி சன்விகா தேவி (27). இவர்கள் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியின் 11 மாத குழந்தை தஞ்சன்.
இந்நிலையில், நேற்று புதன்மார்கோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சண்டிகா தேவியும், தஞ்சனும் இருந்தனர். அப்போது தஞ்சனை தூங்க வைத்த சன்விகா தேவி, அருகில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்பொழுது தூக்கத்தில் இருந்து எழுந்த தஞ்சன், எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பு இருந்த வாளியில் தலை குப்புற விழுந்தார்.
வாளியில் நீர் இருந்ததால் குழந்தையால் கூச்சலிட முடியவில்லை. இதனை சில நேரம் கழித்து பார்த்த அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து குழந்தையை மீட்டனர். தொடர்ந்து குழந்தை அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலிஸார் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கொள்கையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!