Tamilnadu
கவுன்சிலரின் கை விரலை துண்டாக வெட்டி வீசிய இளைஞர்.. பகீர் சம்பவத்தின் காரணம் என்ன?
ஹரியாணா மாநிலம், கர்னல் நகரில் உள்ள 13வது வார்டின் கவுன்சிலராக இஷ் குலாட்டி என்பவர் உள்ளார். இவரது வீட்டின் அருகே கார் பார்க்கிங் இருந்தும் தனது காரை பக்கத்து வீட்டின் அருகே தொடர்ந்து நிறுத்தி வந்துள்ளார். அந்த வீட்டில் இருக்கும் மூத்த தம்பதிகள் இது குறித்து கவுன்சிலர் இஷ் குலாட்டியிடம் கூறியும் அவர் தொடர்ந்து காரை இவர்கள் வீட்டின் அருகேதான் விட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மூத்த தம்பதிகளின் மகன் ஜிதேந்திர குமார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் கவுன்சிலரின் அராஜக நடவடிக்கை குறித்துக் கூறியுள்ளனர்.
இதையடுத்து நேற்று வழக்கம்போல் கவுன்சிலர் இஷ் குலாட்டி வழக்கம்போல் பக்கத்து வீட்டின் அருகே காரை நிறுத்தியுள்ளார். அங்கு வந்த ஜிதேந்திர குமார், 'ஏன் இங்கு காரை நிறுத்துகிறீர்கள். உங்கள் வீட்டிலேயே இடம் இருக்கிறதே அங்கியே நிறுத்துங்கள்' என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜிதேந்திர குமார் வீட்டிற்குள் சென்று கத்தி ஒன்றை எடுத்து வந்து கவுன்சிலர் இஷ் குலாட்டியின் கை விரலைத் துண்டாக வெட்டியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கவுன்சிலரின் கை விரலை விட்டிய ஜிதேந்திர குமாரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !