Tamilnadu
பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த குடும்பம்.. 6 வயது சிறுவன் பரிதாப பலி!
கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே கஸ்பா ஆலம்பாடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மனைவி பரணி. இவர்களுக்கு இனியா (8), பரணிதரன் (6) என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகன் தனது மனைவி மற்றும் மகன் பரணிதரனுடன் பலாப்பழம் சாப்பிட்டுள்ளார். பின்னர் குளிர்பானம் குடித்த அவர்கள், தயிர் சாதத்தையும் சாப்பிட்டு இருக்கிறார்கள்.
இதன் பின்னர் சற்று நேரத்தில் மூவரும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதையடுத்து 3 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூவரும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் பரணிதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!