Tamilnadu
‘அனாதை’ என்று திட்டியதால் ஆத்திரம்.. : பப்ஜி விளையாட்டின் போது நண்பனுக்கு கத்திக்குத்து - 4 பேர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த கூடப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். அவருடைய நண்பர் சசிகுமார் இவர்கள் வீட்டின் அருகே இருவரும் பப்ஜி கேம் விளையாடியதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அப்போது அஜித் குமார், சசிகுமார் இடையே பப்ஜி கேம் விளையாட்டு போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. அஜித் குமார் சசிக்குமாரை பார்த்து "அப்பா அம்மா இல்லாத அனாதை.. உன்னை அடித்தால் யாரும் வர மாட்டார்கள்" எனக் கூறியுள்ளார்.
அப்போது "யார அனாதை-னு சொல்கிற" என கேட்டு சசிகுமார் அஜித்தை அடித்துள்ளார். வீட்டுக்குச் சென்ற அஜித்குமார் தனது சகோதரர்களான செல்வம், சாமுவேல், அபிலேஷ் ஆகியோரை அழைத்து வந்து சசிகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த துருபிடித்த கத்தி எடுத்து சசிகுமார் இடுப்புப்பகுதியில் குத்தியுள்ளார்.
சசிகுமார் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது உறவினர்கள், அஜித்குமார் தரப்பினரை தாக்கியுள்ளனர். இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த அஜித்குமார், சசிகுமார் மற்றும் சசிகுமாரின் உறவினர் ஆகியோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் தகவலறிந்து வந்த வெள்ளவேடு காவல்துறையினர், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருதரப்பினரை சேர்ந்த செல்வம், சாமுவேல், அபிலேஷ், விஜயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, சசிகுமார் உறவினர் தெரிவிக்கையில், சசிகுமார்-அஜித் குமார் மோதல் 'பப்ஜி கேம்' விளையாட்டில் ஏற்படவில்லை என்றும், இதற்கு முன்பாக கடந்த வாரம் சசிகுமாருக்கு அஜித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், சசிகுமாரை பார்க்கும் போதெல்லாம் அஜித்குமார் 'அனாதை' என திட்டியதால் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
பப்ஜி கேம் விளையாட்டில் ஏற்பட்ட விபரீததால் நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கத்திக்குத்து முடிந்துள்ளது கூடப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!