Tamilnadu
படப்பிடிப்பில் லேசான நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நடிகை தீபிகா படுகோனே.. மருத்துவமனையில் அனுமதி!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை தீபிகா படுகோனே. 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் தனக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். தற்போது தீபிகா படுகோனே நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது திடீரென நடிகை தீபிகா படுகோனேவிற்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்த அவரை உடனே மருத்துவமனைக்குப் படக்கழு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தபிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து தனது விடுதிக்குத் திரும்பியுள்ளார். நடிகை தீபிகா படுகோனேவிற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அறிந்த அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் வேண்டி வருகின்றனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!