Tamilnadu
படப்பிடிப்பில் லேசான நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நடிகை தீபிகா படுகோனே.. மருத்துவமனையில் அனுமதி!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை தீபிகா படுகோனே. 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் தனக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். தற்போது தீபிகா படுகோனே நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது திடீரென நடிகை தீபிகா படுகோனேவிற்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்த அவரை உடனே மருத்துவமனைக்குப் படக்கழு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தபிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து தனது விடுதிக்குத் திரும்பியுள்ளார். நடிகை தீபிகா படுகோனேவிற்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அறிந்த அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் வேண்டி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!