Tamilnadu
சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞர் - களத்தில் இறங்கி உதவிய அமைச்சர் பெரியசாமி !
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள இராமயன்பட்டி அருகே சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இதனை உடனடியாக பார்த்து தனது காரை விட்டு இறங்கி வந்துளளார்.
பின்னர் சம்பவ இடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷை பார்த்துவிட்டு, போலிஸார் மற்றும் ஆம்புலன்ஸக்கு உடனடியாக தகவல் தெரிவித்து ஆம்புலன்சை வரவழைத்து சுரேஷ் என்பவரை ஆம்புலன்சில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அமைச்சர் தனது தொலைபேசியில் அரசு மருத்துவமனையின் முதல்வரை அழைத்து சுரேஷ் என்பவரின் உயிரை காப்பாற்ற முதலுதவியும் மற்றும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யுமாறு கூறினார். இதனை கூறிவிட்டு தான் அமைச்சர் இடத்தை விட்டு சென்றார் இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Also Read
-
“நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் உறுதிமொழி!
-
“அன்புக் குழந்தைகளே.. பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
கோவையில் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம்.. வனவிலங்குகளை பாதுகாக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு!
-
மதுரை வந்த பிரதமர் மோடி.. எய்ம்ஸ் முதல் நீட் தேர்வு வரை... பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை!
-
சேத்துமடை முகாம் திறப்பு : Trekking உடன் எழில் கொஞ்சும் இயற்கையை ரசிக்க வேண்டுமா?.. விவரம் உள்ளே!