Tamilnadu
சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞர் - களத்தில் இறங்கி உதவிய அமைச்சர் பெரியசாமி !
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள இராமயன்பட்டி அருகே சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இதனை உடனடியாக பார்த்து தனது காரை விட்டு இறங்கி வந்துளளார்.
பின்னர் சம்பவ இடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷை பார்த்துவிட்டு, போலிஸார் மற்றும் ஆம்புலன்ஸக்கு உடனடியாக தகவல் தெரிவித்து ஆம்புலன்சை வரவழைத்து சுரேஷ் என்பவரை ஆம்புலன்சில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அமைச்சர் தனது தொலைபேசியில் அரசு மருத்துவமனையின் முதல்வரை அழைத்து சுரேஷ் என்பவரின் உயிரை காப்பாற்ற முதலுதவியும் மற்றும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யுமாறு கூறினார். இதனை கூறிவிட்டு தான் அமைச்சர் இடத்தை விட்டு சென்றார் இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!