Tamilnadu
கடலில் குளித்த 4 நண்பர்கள்.. திடீரென மாயமான ஒருவர் - படகில் வந்த மீனவர்கள்: நடந்தது என்ன?
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது ஏஜாஸ், மகேஷ் குமார், கிஷோர் குமார், ஜெகதீஷ் ஆகிய நான்குபேரும் நண்பர்கள். மேலும் இவர்கள் புதுவண்ணாரபேட்டையில் உள்ள பாலிடெக்னின் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் நான்குபேரும் சம்பவத்தன்று கல்லூரிக்குச் செல்லாமல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர்.பிறகு அங்கு இவர்கள் கடலில் இறங்கி மகிழ்ச்சியாகக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நான்குபேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதைப்பார்த்த அங்கிருந்த மீனவர்கள் உடனே அவர்களை மீட்டனர். ஆனால் முகமது ஏஜாஸ் என்ற மாணவர் மட்டும் காணவில்லை. இதனால் இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன மாணவனைத் தேடி வந்தனர். இந்நிலையில் மாணவன் உடல் காசிமேடு கடற்கரையில் கரை ஒதுங்கியது.
இதையடுத்து போலிஸார் அந்த மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் உயிரிழந்த மாணவனுக்கு நீச்சல் தெரியாது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலில் குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!