Tamilnadu
சென்ட்ரல் ஸ்டேஷனில் காணாமல்போன 1.5வயது குழந்தை 30 நிமிடத்தில் மீட்கப்பட்டது எப்படி? ரயில்வே போலிஸ் அதிரடி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை 30 நிமிடத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் ரயில்வே போலிஸார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வினோத் குமார், லதா தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் ருத்விக். குடும்பத்துடன் திருப்பதி சென்று மகனுக்கு மொட்டை அடித்த நிலையில் மீண்டும் விசாகப்பட்டினம் செல்வதற்காக, இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென ஒன்றரை வயது மகன் ருத்விக் காணாமல் போனதையடுத்து பெற்றோர்கள் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவியை அணுகினர்.
ரயில் நிலையத்தில் காணாமல் குழந்தையை மீட்க உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் செந்தில் குமரேசன் தலைமையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து குழந்தையை சுமார் 30 நிமிடத்தில் சிசிடிவி காட்சி உதவியுடன் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலிஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 7.25 மணி நிமிடத்திற்கு புறப்பட்ட இருந்த ஜனசதாப்தி விரைவு ரயிலில் விசாகப்பட்டினம் அனுப்பி வைத்தனர்.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!