Tamilnadu
படிக்காமல் படம் வரைந்த மகளை திட்டிய தாய்.. மனமுடைந்த மாணவியின் செயலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
சென்னை, திருவேற்காடு அடுத்த சின்ன கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகள் இருந்தார். இவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனனி, வீட்டில் படிக்காமல் வரைபடம் வரைந்து கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த அவரது தாய் படிக்காமல் ஏன் வரைபடம் வரைகிறாய் என திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜனனி வீட்டில் உள்ள புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
அங்குச் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாணவி ஜனனி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்டித்ததால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதப்பிளவை வளர்க்கும் மோடியின் வெறுப்பு பேச்சு! : 5 நாட்களில் 17 பொய்கள்!
-
வெள்ள நிவாரணம் : “தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்” - ஒன்றிய பாஜக அரசுக்கு CPI கடும் கண்டனம்!
-
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
-
காவி நிறமாக மாறிய DD லோகோ : சென்னையில் தூர்தர்ஷன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.க. போராட்டம் !
-
தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !