Tamilnadu

கதவை திறந்த நண்பர்கள்.. அதிர்ச்சி கொடுத்த கல்லூரி மாணவன்.. காதலியால் நடந்த சம்பவம்!

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அகர்வால். இவரது மகன் ஷங்கர் அகர்வால் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.டெக் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கல்லூரி விடுதியில் ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் விடுதி நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளனர். பிறகு போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த மறைமலை நகர் காவல்துறையினர் ஷங்கர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஷங்கர் அதே பல்கலைக்கழகத்தில் படித்து வரும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண் ஷங்கரின் காதலை முறித்துக் கொண்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: இப்படியா செல்போனை Unlock செய்வது.. இளம்பெண் செயலால் அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ!