Tamilnadu
வீட்டின் கூரை இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்!
தூத்துக்குடி அண்ணாநகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன் மனைவி காளியம்மாள், இவரது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா திருமணம் முடிந்து பத்து மாதம் ஆகிறது. கர்ப்பிணியான இவரை கடந்த வாரம் வளைகாப்பு நடத்தி அழைத்து வந்து உள்ளனர்.
இவர்கள் வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி மகள் மற்றும் தாய் உயிரிழந்தனர். வீட்டின் ஒரு ஓரத்தில் படுத்திருந்ததால் முத்துராமன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!