Tamilnadu
வெடித்து சிதறிய டயர்; ஒருவர் பலி..11 பேருக்கு படுகாயம்: சிகிச்சை பெறுபவரை பார்க்க சென்றபோது நேர்ந்த கோரம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக அவரின் உறவினர்களான பிருந்தா, பிரகாஷ் உள்ளிட்ட 12 பேர் ஒரு காரில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கே.பெரியபட்டி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்ததாக கூறப்படும் நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் சாலையில் சிறிது தூரம் சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிருந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மண், கற்கள், விபத்துக்குள்ளான காரின் பாகங்கள் சாலையில் கிடந்ததால் மேலும் விபத்து நிகழும் என்ற நிலை இருந்தது. உடனே அங்கு விரைந்த மணப்பாறை போலிஸார் பொதுமக்கள் உதவியுடன் வாகனங்களை நிறுத்தி சாலையில் கிடந்த கல், மண் மற்றும் உடைந்து கிடந்த காரின் பாகங்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து மணப்பாறை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!