Tamilnadu
நள்ளிரவில் திருட்டு.. தட்டிக்கேட்ட சமையல்காரரை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை : ‘பகீர்’ சம்பவம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நள்ளிரவில் மின்மோட்டார் திருடுவதை தடுக்க முயன்ற சமையல்காரரை, அவரது வீட்டிற்கு வெளியே வைத்து தலையில் இரும்பு ராடால் கொடூரமான அடித்து கொலை செய்த இளைஞரை போலிஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
ஆற்காடு அருகே ராமசாமி தெருவில் வசித்து வந்தவர் திருமால் (59). அதே பகுதியில் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு சமைக்கும் தொழில் செய்து வருகிறார். திருமால் கடந்த 22ம் தேதி அவரது வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே
இருந்த பொது மின்மோட்டாரை இளைஞர் ஒருவர் திருட முயன்றதால் எழுந்த சத்தத்தை கேட்டு வெளியே சென்று பார்த்துள்ளார். பொது மின்மோட்டாரை திருடப்படுவதால் கூச்சலிட்டதோடு அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அச்சமடைந்த மின்மோட்டார் திருட்டில் ஈடுபட்டு இருந்த செல்வம் என்ற இளைஞர் திடீரென இரும்பு ராடால், திருமாலின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட தொடர் விசாரணையில் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!