Tamilnadu
நள்ளிரவில் திருட்டு.. தட்டிக்கேட்ட சமையல்காரரை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை : ‘பகீர்’ சம்பவம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நள்ளிரவில் மின்மோட்டார் திருடுவதை தடுக்க முயன்ற சமையல்காரரை, அவரது வீட்டிற்கு வெளியே வைத்து தலையில் இரும்பு ராடால் கொடூரமான அடித்து கொலை செய்த இளைஞரை போலிஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
ஆற்காடு அருகே ராமசாமி தெருவில் வசித்து வந்தவர் திருமால் (59). அதே பகுதியில் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு சமைக்கும் தொழில் செய்து வருகிறார். திருமால் கடந்த 22ம் தேதி அவரது வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே
இருந்த பொது மின்மோட்டாரை இளைஞர் ஒருவர் திருட முயன்றதால் எழுந்த சத்தத்தை கேட்டு வெளியே சென்று பார்த்துள்ளார். பொது மின்மோட்டாரை திருடப்படுவதால் கூச்சலிட்டதோடு அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அச்சமடைந்த மின்மோட்டார் திருட்டில் ஈடுபட்டு இருந்த செல்வம் என்ற இளைஞர் திடீரென இரும்பு ராடால், திருமாலின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட தொடர் விசாரணையில் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!