Tamilnadu
INSTA மூலம் வலை.. கேரள சிறுமிகளின் ஆபாச படங்களை வைத்து மிரட்டல்.. சென்னை கல்லூரி மாணவன் சிக்கியது எப்படி?
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம், சென்னையைச் சேர்ந்த மார்க் டி குரூஸ் (19) என்ற இளைஞன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிகளிடமிருந்து ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார்.
மார்க் டி குரூஸ் கடந்த சில நாட்களாக கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கேரளா மாநில சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். கேரளா மாநில சைபர் குற்றப்பிரிவு போலிஸார் புகார் மனுவை தமிழக போலிஸாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
புனித தோமையர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியைச் சேர்ந்த மார்க் டி குரூஸ் என்ற இளைஞனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!