Tamilnadu
இந்த 10 கோவில்களில் பக்தர்களுக்கு இனி இலவச பிரசாதம்... என்னென்ன உணவு வகைகள் கிடைக்கும்?
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் இலவச பிரசாதம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் உள்ள 10 கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வடபழனி முருகன் கோவிலில் தொடங்கிவைத்தார்.
வடபழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 10 கோவில்களில் இந்த திட்டம் இன்று முதால் தொடங்கியது.
இந்த பத்து கோவில்களில் இலவச பிரசாதமாக தலா 40 கிராம் எடையில் பொங்கல், தயிர் சாதம், லட்டு, புளியோதரை, சுண்டல் உள்ளிட்ட 4 முதல் 6 வகையான உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அடுத்தடுத்து மற்ற கோவில்களிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!