Tamilnadu
இந்த 10 கோவில்களில் பக்தர்களுக்கு இனி இலவச பிரசாதம்... என்னென்ன உணவு வகைகள் கிடைக்கும்?
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் இலவச பிரசாதம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் உள்ள 10 கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வடபழனி முருகன் கோவிலில் தொடங்கிவைத்தார்.
வடபழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், திருவரங்கம் அரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய 10 கோவில்களில் இந்த திட்டம் இன்று முதால் தொடங்கியது.
இந்த பத்து கோவில்களில் இலவச பிரசாதமாக தலா 40 கிராம் எடையில் பொங்கல், தயிர் சாதம், லட்டு, புளியோதரை, சுண்டல் உள்ளிட்ட 4 முதல் 6 வகையான உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அடுத்தடுத்து மற்ற கோவில்களிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!