Tamilnadu
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளை வெட்டி கொலை.. திருமணமான 15 நாளில் நடந்த கொடூரம்!
திண்டுக்கல் மாவட்டம், அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இளைஞரான இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், சூர்யா என்ற நண்பரின் பிறந்நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரபாகரன் சென்றுள்ளார். அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று அவர் சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளது. தடுக்க வந்த அவரது நண்பர் கார்த்திக் என்பவரையும் அந்த கும்பல் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த பிரபாகரனை மீட்டு அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா? என விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமேயான நிலையில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!