Tamilnadu
“ஓராண்டுக்குள் 852 சிலைகள்.. ரூ.2600 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு” : அமைச்சர் சேகர் பாபு தகவல்!
தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2600 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மற்றும் கடத்தப்பட்ட 852 கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்குமிடம், வாகன நிறுத்துமிடம், நேர்த்திக்கடன் செலுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட பணிகளை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். நெடுவரம்பாக்கம் கிராமத்தில் சிவன் கோவிலை தனியார் பள்ளி ஆக்கிரமித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு கோவில்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட 852 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்து ரூ. 2600 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!