Tamilnadu
நேற்று அறிவிப்பு.. இன்று சமத்துவநாள் கொண்டாட்டம்: அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை!
இந்தியா முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப்படத்திற்க மலர்தூவிரி மரியாதை செலுத்தினார். பிறகு," சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்" என சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிறகு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சிலையை பரிசாக வழங்கினார்.
நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!