Tamilnadu
காணொளி விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட வழக்கறிஞர்.. சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு!
உயர்நீதிமன்ற காணொளிக்காட்சி விசாரணையின் போது, கேமரா இயக்கத்தில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர், பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அதில், சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சி.பி.சி.ஐ.டி போலிஸார் வழக்குப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், இரண்டு வாரங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே வழக்கறிஞர் 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி-க்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
UPSC முடிவுகள் வெளியானது! - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்!
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா…பும்ரா குறித்து சஞ்சு சாம்சன் சொன்ன அந்த வார்த்தை!
-
“‘பட்டா’ என்ற பல ஆண்டு கனவை நம்முடைய அரசு இன்றைக்கு நனவாக்கி இருக்கிறது!” - துணை முதலமைச்சர் உதயநிதி உரை!