Tamilnadu
காணொளி விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட வழக்கறிஞர்.. சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு!
உயர்நீதிமன்ற காணொளிக்காட்சி விசாரணையின் போது, கேமரா இயக்கத்தில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர், பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அதில், சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சி.பி.சி.ஐ.டி போலிஸார் வழக்குப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், இரண்டு வாரங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே வழக்கறிஞர் 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி-க்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!