Tamilnadu
ரயில் பயணத்தின் போது தகராறு.. ஒருவர் சுட்டுக்கொலை - CRPF வீரருக்கு 7 ஆண்டுகள் சிறை - நடந்தது என்ன?
திருவள்ளூர் அருகே கடந்த 1996 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் காவலர் பயிற்சிகாக செல்ல சேரன் விரைவு ரயிலில் சாதாரண வகுப்பில் 5 சி.ஆர்.பி.எப் காவலர்கள் ஏறியுள்ளனர். அப்போது கூட்டம் நெரிசல் அதிகமாக இருந்ததால் இருக்கையில் அமர காவலர்களுக்கும் பயணிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சார்ந்த ஏசி தாஸ் என்ற சி.ஆர்.பி.எப் காவலர் பயிற்சிக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரை சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிந்த அரக்கோணம் இரயில்வே காவல்துறையினர் சம்பவம் நடந்த இடம் கடம்பத்தூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால் வழக்கினை கடம்பத்தூர் காவல்துறையினருக்கு மாற்றி கொடுத்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் முதலாம் அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில் இறுதி கட்ட விசாரணயில் துப்பாக்கியால் சுட்டது நிரூபிக்கப்பட்டதால், சி.ஆர்.பி.எப் காவலர் ஏசி தாஸ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்பளித்தார்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!