Tamilnadu
தி.மு.க அரசை பாராட்டிய கேரள பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ்.. என்ன கூறினார் தெரியுமா?
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் பாம்பு பிடிப்பதில் வல்லவர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவரை அறியாத கேரள மக்களே இருக்க முடியாது.
இப்படி இருக்கையில், அண்மையில் கோட்டயம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாம்பு புகுந்ததால் சுரேஷ் அங்குச் சென்று பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட முயன்றபோது அவரை பாம்பு கடித்தது.
இதனால் சுயநினைவு இழந்த வாவா சுரேஷ் தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கேரள அரசின் தரமா சிகிச்சை காரணமாக வா முழுமையா குணமடைந்து மீண்டும் பாம்ப பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கோவிலுக்கு வாவா சுரேஷ் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் கூறிய வா வா சுரேஷ், "தமிழ்நாட்டில் இருளர் மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. பாம்பு விஷத்திலிருந்து கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு அரசை போன்று கேரள அரசும் பாம்பு பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!