Tamilnadu
தி.மு.க அரசை பாராட்டிய கேரள பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ்.. என்ன கூறினார் தெரியுமா?
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் பாம்பு பிடிப்பதில் வல்லவர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவரை அறியாத கேரள மக்களே இருக்க முடியாது.
இப்படி இருக்கையில், அண்மையில் கோட்டயம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாம்பு புகுந்ததால் சுரேஷ் அங்குச் சென்று பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட முயன்றபோது அவரை பாம்பு கடித்தது.
இதனால் சுயநினைவு இழந்த வாவா சுரேஷ் தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கேரள அரசின் தரமா சிகிச்சை காரணமாக வா முழுமையா குணமடைந்து மீண்டும் பாம்ப பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கோவிலுக்கு வாவா சுரேஷ் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் கூறிய வா வா சுரேஷ், "தமிழ்நாட்டில் இருளர் மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. பாம்பு விஷத்திலிருந்து கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு அரசை போன்று கேரள அரசும் பாம்பு பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!