Tamilnadu
தூக்கத்தில் 2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த சோகம்.. அந்தரத்தில் தொங்கிய இளைஞர் : பகீர் சம்பவம்!
திருப்பெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தில், பாதியில் கைவிடப்பட்ட இரண்டடுக்கு கட்டடம் உள்ளது. இங்கு, வட மாநிலம் அசாமை சேர்ந்த பிரேம் (27) என்பவர், காவலாளியாக வேலை செய்து வந்தார். பணி முடித்து, இரண்டாவது மாடியில் துாங்கிக்கொண்டு இருந்தார்.
தூக்கத்தில் உருண்டு, இரண்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். அப்போது முதல் மாடியில் நீட்டிக்கொண்டிருந்த கட்டுமான கம்பி, பிரேமின் தொடையின் ஒரு புறம் குத்தி, மறுபுறம் கம்பி வெளியேறியதால், தலைக்கீழாக, அந்தரத்தில் தொங்கியபடி வலியால் துடிதுடித்தார்.
அதிகாலை அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பெரும்புதுார் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணகுமார், போக்குவரத்து அலுவலர் ரவிசந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பிரேமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜெனரேட்டர் பொருத்தி, 'கட்டர்' இயந்திரம் வாயிலாக கம்பியை துண்டித்து, ஒரு மணி நேரம் போராடி, பிரேமை மீட்டனர். பின்னர் வாலிபர் பிரேமை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி தொடையில் குத்தியிருந்த கம்பியை அறுவை சிகிச்சைமூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
துாக்கத்தில் உருண்டு விழுந்து, தொடையில் கம்பி குத்தி அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வடமாநில இளைஞரை போராடி மீட்ட, தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!